கோவை, நவம்பர் 27
சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் சாலையில் எழுதப்பட்ட "WHO KILLED RAGU?" என்ற வாசகம் அழிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலால் கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த ரகுபதி (32) என்ற வாலிபர் பலியானதாக தகவல் வெளியாகியது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
டிப்பர் லாரி மோதியதே வாலிபர் மரணத்திற்கு காரணம் என்றும், லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் விளக்கம் அளித்தனர்.
இந்த சூழலில், நேற்று நள்ளிரவு ரகுபதி உயிரிழந்த இடத்தில் சில நபர்கள் "WHO KILLED RAGU?" (ரகுவை கொன்றது யார்?) என்ற வாசகத்தை எழுதியதோடு, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பேனர்களையும் கிழித்து சென்றனர்.
சாலையில் எழுதப்பட்ட வாசகம் தமிழக அளவில் வைரலாகி சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளானது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, லாரி மோதிய விபத்தினாலேயே வாலிபர் உயிரிழந்ததாகவும், தி.மு.க.வினர் திட்டமிட்டு வதந்தி பரப்புவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், சாலை எழுதப்பட்ட வாசகத்தை இன்று அதிகாலை மாநகராட்சி அதிகாரிகள் கருப்பு நிற தாரை ஊற்றியும், மணலை போட்டும் அழித்தனர்.

சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் சாலையில் எழுதப்பட்ட "WHO KILLED RAGU?" என்ற வாசகம் அழிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலால் கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த ரகுபதி (32) என்ற வாலிபர் பலியானதாக தகவல் வெளியாகியது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
டிப்பர் லாரி மோதியதே வாலிபர் மரணத்திற்கு காரணம் என்றும், லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் விளக்கம் அளித்தனர்.
இந்த சூழலில், நேற்று நள்ளிரவு ரகுபதி உயிரிழந்த இடத்தில் சில நபர்கள் "WHO KILLED RAGU?" (ரகுவை கொன்றது யார்?) என்ற வாசகத்தை எழுதியதோடு, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பேனர்களையும் கிழித்து சென்றனர்.
சாலையில் எழுதப்பட்ட வாசகம் தமிழக அளவில் வைரலாகி சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளானது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, லாரி மோதிய விபத்தினாலேயே வாலிபர் உயிரிழந்ததாகவும், தி.மு.க.வினர் திட்டமிட்டு வதந்தி பரப்புவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், சாலை எழுதப்பட்ட வாசகத்தை இன்று அதிகாலை மாநகராட்சி அதிகாரிகள் கருப்பு நிற தாரை ஊற்றியும், மணலை போட்டும் அழித்தனர்.
